ஓபிஎஸ் அணி சார்பில் முப்பெரும் விழா - ஈபிஎஸ் அணியினரின் எச்சரிக்கையை மீறி ஏற்பாடு

x

ஈபிஎஸ் அணியினரின் எச்சரிக்கையையும் மீறி, அதிமுகவின் பிரமாண்ட கொடியுடன் ஓபிஎஸ் அணி சார்பில் மாநாடு ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...

திருச்சியில் வருகிற 24ம் தேதி ஓபிஎஸ் அணி சார்பில் முப்பெரும் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மேடை அமைக்கும் பணி நேற்று பந்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கிய நிலையில், ஜி கார்னர் மைதானத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிமுக கொடியை அனுமதியின்றி பயன்படுத்தினால் வழக்கு தொடரப்படும் என ஈபிஎஸ் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மைதானத்தை சுற்றிலும் அதிமுகவின் பிரமாண்ட கொடிகள் நடப்பட்டுள்ளன. இதற்கிடையே மாநாட்டு ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் கிருஷ்ணன், வெள்ளமண்டி நடராஜன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்