மேடை பயத்தை போக்க மகளுக்காக நடனம் ஆடிய தாய் - அன்னையர் தினத்தில் நிகழ்ந்த நெகிழ்ச்சி

x

சென்னை பூந்தமல்லியில், மேடை பயத்தை போக்க சிறுமி முன்பு நடனம் ஆடிய தாயின் செயல் வரவேற்பை பெற்றது. அரசு பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், நான்கு வயது சிறுமி பரதநாட்டியம் ஆடி அசத்தினார். அப்போது, சிறுமியின் பயத்தை போக்க, அவரது தாய் மேடை முன்பு பாடலுக்கு ஏற்ப நடன அசைவுகளை செய்து காட்டினார். அதை பார்த்தவாறு, சிறுமியும் பரதநாட்டியத்தை சிறப்பாக ஆடி காட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்