சிக்கிமில் அதிக குழந்தைகள் பெற்றால் ஊதிய உயர்வு

x

சிக்கிம் மாநிலத்தில் குழந்தை பிறப்பு விகிதம் குறைவாக உள்ள நிலையில், குழந்தைகள் பெற்றுக் கொள்வதை ஊக்கப்படுத்த ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு ஊழியர்களுக்கு 2 குழந்தைகள் இருந்தால் முன்கூட்டியே ஊதிய உயர்வு அளிக்கப்படும் எனவும், 3 குழந்தைகள் இருந்தால் கூடுதல் ஊதிய உயர்வு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி இந்த சலுகை அமலுக்கு வருவதாகவும், அதேசமயம் குழந்தையை தத்தெடுப்பவர்களுக்கு இந்த சலுகைகள் பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்