பார்சலுக்கு பணம் கேட்ட ஓனரை புரட்டி எடுத்த கும்பல் - பரபரப்பு சிசிடிவி காட்சி

x

சிவகங்கையில், ஹோட்டல் உரிமையாளர் தாக்கப்பட்ட விவகாரத்தில், சி.சி.டி.வி காட்சியை வைத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தெப்பக்குளம் அருகே உள்ள உணவகத்தில், கடந்த 13ஆம் தேதி பார்சல் வாங்கிக் கொண்டு பணம் கேட்ட உரிமையாளர் விவேகானந்தனை 2 பேர் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக விவேகானந்தன் அளித்த புகாரின் அடிப்படையில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், ரோஸ் நகரை சேர்ந்த கணேஷ்குமார், தெப்பக்குளத்தை சேர்ந்த சக்திராஜன் ஆகியோரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்