"என் வண்டி வந்தாலே ரோடு தாங்காது"...வறுத்தெடுத்த மதுரை ஆட்சியர் - உறைந்து நின்ற அதிகாரிகள்

x

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் தரத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளை கண்டித்தார். நபார்டு வங்கி உதவியுடன், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் வாடிப்பட்டி முதல் குலசேகரன்கோட்டை வரை புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இந்நிலையில், வாடிப்பட்டி பகுதிக்கு வந்த மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, புதிய சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்தார். அப்போது, சாலை தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகளை கண்டித்துச் சென்றார்.


Next Story

மேலும் செய்திகள்