ஆன்லைனில் மலர்ந்து, வளர்ந்த காதல்... இந்தியரை கரம்பிடித்த பாக். இளம்பெண்! ஜோடியை பிரித்து பாக். அனுப்பிய போலீஸ்

x
  • இந்தியரை சட்டவிரோதமாக திருமணம் செய்த பாகிஸ்தான் இளம்பெண், சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.
  • பாகிஸ்தானை சேர்ந்த 19 வயது இளம்பெண் இக்ரா ஜீவானிக்கும், உத்தரபிரதேச மாநில இளைஞர் முலாயம் சிங்குடன் ஆன்-லைனில் காதல் ஏற்பட்டுள்ளது.
  • நாளடைவில் இருவரும் திருமணம் செய்துக்கொள்ள திட்டமிட்ட நிலையில் இக்ரா, இந்தியாவுக்கு வர விசா கிடைக்காத நிலையில் நேபாளம் சென்றுள்ளார்.
  • அங்கு சென்று அவரை பிக்கப் செய்த முலாயம் சிங், அங்கேயே சட்டவிரோதமாக திருமணம் செய்துக்கொண்டு இக்ராவை இந்தியாவிற்கு அழைத்துவந்து பெங்களூருவில் குடும்பம் நடத்தியுள்ளார்.
  • இந்து பெண்ணாக வாழ்ந்த அவர் அவ்வப்போது தொழுகை செய்ததை அக்கம் பக்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.
  • உடனடியாக விசாரித்த பெங்களூரு போலீஸ், இக்ராவின் பாகிஸ்தான் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றினர்.
  • தொடர்ந்து அவரிடம் விசாரித்த போலீசார், பஞ்சாப் அழைத்துச் சென்று வாகா எல்லையில் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்