கருப்பன் யானையை பிடிக்க 3 கும்கி யானைகளை களம் இறக்கிய வனத்துறை

x

சத்தியமங்கலம் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் கருப்பன் யானையை பிடிக்க 3 கும்கி யானைகள் களம் இறக்கப்பட்டுள்ளது.


சத ்தியமங்கலம் அக்கூர் ஜோரை வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் கருப்பன் யானை பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.

இதன் காரணமாக திகினாரை, ரங்கசாமி கோவில், கரளவாடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கருப்பன் யானையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே கருப்பன் யானையை பிடிக்க 2 கும்கியானைகளை வனத்துறையினர் பயன்படுத்தி வந்த நிலையில், மூன்றாவதாக கலீமை களம் இறக்கியுள்ளனர்.

மூன்று கும்கி யானைகளை பயன்படுத்தி கருப்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி வேறு வனப்பகுதிக்கு கொண்டு செல்ல வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்