3 மகன்களும் தொழிலதிபர்கள்...கவனிக்காத மருமகள்கள் - கடைசியில் நடுக்காட்டில்...| Karaikudi | Elder

x

சிவகங்கை மாவட்டம் வண்டல் கிராமத்தை சேர்ந்தவர் அய்யாச்சாமி. 73 வயதான இவருக்கு மூன்று மகன்கள் இருந்த நிலையில், மூவரும் மலேசியாவில் தொழிலதிபர்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 4 வருடங்களுக்கு முன்பு முதியவரின் மனைவியும் உயிரிழந்த நிலையில், தனது 3 மருமகள்களின் கவனிப்பில் முதியவர் வசித்து வந்துள்ளார். இதில், அவரது மூன்று மருமகள்களும் சரிவர கவனிக்கவில்லை என கூறப்படும் நிலையில், மன உளைச்சலில் இருந்த முதியவர் காரைக்குடி அருகேயுள்ள காட்டு பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், முதியவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்