விபத்தில் உயிரிழந்த ரசிகர்... மதுரை விரைந்த ஜெயம் ரவி... குழந்தைகளின் கல்வி செலவை ஏற்பதாக உறுதி

விபத்தில் மறைந்த, தனது மதுரை மாவட்ட ரசிகர் மன்ற தலைவரின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் தெரிவித்த நடிகர் ஜெயம் ரவி, அவரது குழந்தைகளின் கல்வி செலவை ஏற்பதாக உறுதியளித்துள்ளார்.
x

விபத்தில் மறைந்த, தனது மதுரை மாவட்ட ரசிகர் மன்ற தலைவரின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் தெரிவித்த நடிகர் ஜெயம் ரவி, அவரது குழந்தைகளின் கல்வி செலவை ஏற்பதாக உறுதியளித்துள்ளார். ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தின் மதுரை மாவட்ட தலைவராக இருந்து வந்த நிலையூரை சேர்ந்த செந்தில் என்பவர், சில நாட்களுக்கு முன்னர் லாரி கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த ஜெயம் ரவி, செந்திலின் வீட்டிற்கு சென்று, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் குடும்பத்தினரில் பேரில் 5 லட்சம் டெபாசிட் செய்வதாகவும், செந்திலின் இரு குழந்தைகளின் கல்வி செலவை முழுமையாக ஏற்பதாகவும் அவர் உறுதியளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்