"மத்திய அமைச்சர் சொல்வது கோழைத்தனம்" - ஜெய்சங்கரை கடுமையாக விமர்சித்த ராகுல்

x
  • பெரிய பொருளாதாரம் கொண்ட சீனாவை எப்படி எதிர்த்து போராடுவது என்று மத்திய அமைச்சர் சொல்வது தேசியவாதம் அல்ல, கோழைத்தனம் என ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
  • சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் அமர் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பாரத் ஜோடோ யாத்ரா தேசபக்தியின் உண்மையான உணர்ச்சியை தூண்டியதாக தெரிவித்தார்.
  • நாடாளுமன்றத்தில் அதானி குறித்த தங்களது கேள்விகள் அகற்றப்படுவதாக குற்றம் சாட்டிய அவர், உண்மை வெளிவரும் வரை கேள்விகள் கேட்போம் என்றார்.
  • அதானியை ஏன் பாஜக பாதுகாக்கிறது என்றும், ஏன் விசாரணை இல்லை என்றும் கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, அதானியும் மோடியும் ஒன்றுதான் என்றும் கூறினார்.
  • பெரிய பொருளாதாரம் கொண்ட சீனாவை எப்படி எதிர்த்து போராடுவது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியிருப்பதை குறிப்பிட்ட அவர், இது தேசியவாதம் அல்ல, கோழைத்தனம் என்று கடுமையாக விமர்சித்தார்.
  • ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டபோது நமது பொருளாதாரம் மிகப் பெரியதாக இருந்ததா? என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

Next Story

மேலும் செய்திகள்