புதுவையில் சுதந்திர தின கொண்டாட்டம்... தேசியக் கொடியேற்றி வைத்தார் முதல்வர் ரங்கசாமி...

x

நாட்டின் 75-வது சுதந்திர தின விழா புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி சிலை முன்பு வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. மாநில முதலைமைச்சர் ரங்கசாமி தேசியக் கொடியேற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். விழாவில் சபாநாயகர் செல்வம், சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர் சிவா, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயலாளர் மற்றும் அரசு உயரதிகாரிகள் பங்கேற்றனர். தொடர்ந்து பல்வேறு துறைகளில் சாதனைப்படைத்த பல்வேறு துறையினருக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன. இதனையடுத்து கலைநிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றன.


Next Story

மேலும் செய்திகள்