வடமாநில இளைஞருடன் தகாத உறவு... பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம் - ஒசூரில் அதிர்ச்சி சம்பவம்

x

ஒசூர் அருகே கலுகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் ஆஞ்சினம்மா. திருமணமான இவரின் கணவர் இறந்த நிலையில், ஆஞ்சினம்மாவிற்கும் ஒடிசாவை சேர்ந்த சோனு என்ற இளைஞருக்கும் தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் ஆஞ்சினம்மா வீட்டில் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் சோனுவை தேடி வந்தனர். விசாரணையில், சோனு குஜாராத்தில் தலைமறைவாகியிருப்பது போலீசாருக்கு தெரியவர அவரை கைது செய்து தமிழகம் அழைத்து வந்தனர். விசாரணையில், சோனுவிடம் ஆஞ்சினம்மா அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் கொலை செய்ததாக தகவல் வெளியான நிலையில், சோனு சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்