சூதாட்டத்தில் தோற்றதால் மனஉளைச்சல்... இழந்த பணத்தை கேட்க சென்ற இடத்தில விபரீதம் - வெட்டிக் கொலை செய்த நண்பர்கள்

x

ஒசூர் காரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் 27 வயதான மோகன். கூலி தொழிலாளியான இவர், நண்பர்கள் உமேஷ் மற்றும் மூர்த்தியுடன் சேர்ந்து யுகாதி பண்டிகை கொண்டாடியுள்ளார். அப்போது, அங்கு நடைபெற்ற சூதாட்டத்தில் மூவரும் கலந்து கொண்டதில், மோகனிடம் இருந்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை உமேஷ் மற்றும் மூர்த்தி ஆகியோர் வென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சூதாட்டத்தில் வென்ற பணத்துடன் மது அருந்த சென்ற இருவரையும் வழிமறித்த மோகன் பணத்தை திரும்ப கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது, ஏற்பட்ட தகராறில் இரு சக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் இருவரும் தாக்கியதில் படுகாயமடைந்த மோகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி மோகன் உயிரிழந்த நிலையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதனிடையே, இந்த சம்பவத்தில் உமேஷ் மற்றும் மூர்த்தி ஆகிய இருவரும் போலீசில் சரணடைந்த நிலையில், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்