கனமழை எதிரொலி..- பள்ளிகளுக்கு விடுமுறை

x

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, டெல்லி, பஞ்சாப், அரியானாவில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்யும் என ஆய்வு மையம் கூறியுள்ளதால், பஞ்சாபில் 13ஆம் தேதி வரை பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரியானாவில் பஞ்ச்குலா மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், இன்றும் நாளையும் விடுமுறை அளிக்கப்படும் என்று மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில், ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 6ஆம் வகுப்பு முதல் வழக்கம் போல் பள்ளிக்கூடங்கள் இயங்கும் என தெரவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்