உள்ளாடைக்குள் அரை கோடி... சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு

x

சென்னை, விமான நிலையத்தில் உள்ளாடைகளில் வைத்து கடத்தி வரப்பட்ட 918 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விமானம் மூலம் கொழும்புவில் இருந்து சென்னைக்கு வந்த பயணிகளை சென்னை விமான நிலைய அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, சந்தேகத்தின் அடிப்படையில் சென்னையை சேர்ந்த 2 இளைஞர்களை தனியறைக்கு அழைத்து சென்ற போலீசார், அவர்களின் உடமைகளை சோதனை செய்தனர். அப்போது, தங்க கட்டிகள், செயின்கள் ஆகியவற்றை உள்ளாடைகளில் மறைத்து வைத்திருந்தது தெரியவர, இது தொடர்பாக மூவரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 49 லட்சம் மதிப்புள்ள 918 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்