கேரளாவை தொடர்ந்து குஜராத்திலும்...சூனிய பொம்மை போல் முடியை கட்டி சித்ரவதை..

x

கேரளாவை தொடர்ந்து குஜராத்திலும்...சூனிய பொம்மை போல் முடியை கட்டி சித்ரவதை..தந்தையே மகளுக்கு செய்த கொடூரம்

கேரளாவை தொடர்ந்து குஜராத்திலும் மூட நம்பிக்கையால் 14 வயது சிறுமியை பெற்ற தந்தையே சித்ரவதை செய்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் உள்ள கிர்-சோம்நாத் மாவட்டத்தில் உள்ள தாவா மாவட்டத்தில் வசித்து வந்த 14 வயது சிறுமியின் உடலில் பேய் இருப்பதாக சிறுமியின் தந்தையும், மாமாவும் நம்பியுள்ளனர். இதையடுத்து, சிறுமியை கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி காட்டு பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மூட்டிய தீ முன்பு சிறுமியை நிக்க வைத்தும், சூனிய பொம்மை போல் முடியை கம்பில் கட்டி, இரு நாற்காலிகளுக்கு நடுவே அமர வைத்தும் சித்ரவதை செய்துள்ளனர். 7 நாட்களாக சிறுமிக்கு குடிக்க தண்ணீர் கூட கொடுக்காமல் கொடுமை படுத்தியதில் சிறுமி உயிரிழந்துள்ளார். இதையடுத்து, உயிரிழந்த சிறுமிக்கு தொற்று நோய் ஏற்பட்டதால் யாருக்கு தெரிவிக்காமல் சிறுமியின் உடலை அடக்கம் செய்ததாக அவர்கள் கூறி வந்துள்ளனர். ஆனால் பேத்தியின் மரணத்தில் சந்தேகமடைந்த தாத்தா, போலீசாரிடம் புகார் தெரிவிக்கவே... இந்த விவகாரம் தாமதமாக வெளியுலகத்திற்கு தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்