இரும்பு கடையில் குவிந்து கிடந்த அரசு பள்ளி மாணவர்களின் சைக்கிள்கள் - அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்

x

அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச மிதிவண்டிகள் இரும்புக் கடையில் குவிந்து கிடந்த விவகாரத்தில், அவை பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழ்நாடு அரசு சார்பாக அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், விருத்தாச்சலம் ஆலடி சாலையில் அமைந்துள்ள தனியார் இரும்பு கடையில் அரசு சார்பாக வழங்கப்பட்ட மிதிவண்டிகள், ஸ்டிக்கர் கூட பிரிக்கப்படாமல் புத்தம் புதிதாக குவிந்து இருப்பதாக தகவல் கிடைத்தது.

இந்த மிதிவண்டிகளை, மாவட்ட ஆட்சியர் உதவியாளரின் அறிவுறுத்தலின்படி வருவாய் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இவற்றைப் பெற்றுக் கொண்ட பின்னர், மாணவர்கள் இரும்புக் கடையில் விட்டுச் சென்றனரா? அல்லது பள்ளி நிர்வாகமே இந்த செயலில் ஈடுபட்டனரா என்பது குறித்து விசாரிக்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்