"ஹிட்லரை போல் ஆட்சி" "குண்டு வெடிப்பு மையமான மாநிலம் -"விமர்சித்து தள்ளிய அமித் ஷா

x
  • இரண்டு நாட்கள் பயணமாக மேற்குவங்கம் சென்றுள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, பிர்பூரில் மக்கள் மத்தியில் பேசினார்.
  • அப்போது, வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில், 35 இடங்களில் பாஜகவை வெற்றி பெற செய்ய வேண்டும் என்ற அவர், சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்கான டீசராக அந்த வெற்றி அமைய வேண்டும் என்றார்.
  • பிரதமர் மோடியை மூன்றாவது முறையாக பிரதமராக்க உதவுமாறு கேட்டுக்கொண்ட அவர், மம்தா பானர்ஜியின் ஹிட்லர் ஆட்சி தொடர்வதை பாஜக அனுமதிக்காது என்றார்.
  • மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி அமைந்தால் ஊடுருவல், பசு கடத்தல், குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடக்காது என தெரிவித்த அமித்ஷா, மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு மேற்குவங்கத்தை குண்டுவெடிப்புகளின் மையமாக மாற்றியுள்ளதாக குற்றம்சாட்டினார்

Next Story

மேலும் செய்திகள்