கோயில் உண்டியல் முதல் டீக்கடை வரை... சாக்லெட், பிஸ்கெட்களை அமர்ந்து சாப்பிட்டு கடைகளில் ஆட்டம் காட்டிய விசித்திர திருடர்கள்

x

அணைக்கட்டு அருகே கோவில் உண்டியல் முதல் டீக்கடை வரை கைவரிசை காட்டிய கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்...

வேலூர் மாவட்டம் கொட்டாவூர் கிராமத்தில் அடுத்தடுத்த 9 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாட்டுத் தீவன கடை, ஹோட்டல், சலூன், மளிகை கடை, பழக்கடை, கோவில் உண்டியல் உள்ளிட்ட இடங்களில் கைவரிசை காட்டிய கும்பல், டீக்கடையில் இருந்த பன், பிஸ்கெட், சிகரெட், ஸ்வீட், சப்போட்டா பழம் ஆகியவையும் அள்ளிச் சென்றுள்ளனர்.

மளிகை கடையின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், அங்கு இருந்த சாக்லெட், பிஸ்கெட் போன்ற தின்பண்டங்களை சாவகாசமாக அமர்ந்து சாப்பிட்டுவிட்டு, மிச்சத்தையும் விட்டுவைக்காமல் எடுத்து சென்றுள்ளனர்.

இதனிடையே திருட்டு சம்பவம் வெளியில் தெரியாமல் இருக்க கடைகளின் மின் இணைப்பை துண்டித்ததாக தெரிகிறது.

மொத்தமாக ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ள நிலையில், தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் போலீசார் கைரேகை தரவுகளை சேகரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்