தாம்பரம் பைபாஸில் பலியான தந்தை..தலையில் அடித்து கதறிய பெண் SI - நெஞ்சை கலங்கடித்த காட்சி

x

சென்னை கோவூர் அருகே சாலை விபத்தில், பெண் சப் இன்ஸ்பெக்டரின் தந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொளத்தூர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர், தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில் இருசக்கர வாகத்தில் சென்றுள்ளார். அப்போது, கட்டப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்ட செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். செல்வராஜின் மகள் தீபா, திருமங்கலம் காவல் நிலையத்தில் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் நிலையில், தந்தையின் உடலை பார்த்து அவர் கதறி அழுத காட்சிகள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்