பயணியிடமிருந்து கட்டு கட்டாக பணம் பறிமுதல்.. பெரம்பூர் ரயில்நிலையத்தில் பரபரப்பு

x

பெரம்பூர் ரயில் நிலையத்தில், பயணியிடமிருந்து கணக்கில் வராத 52 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை, பெரம்பூர் ரயில்வே போலீசார், நேற்று காலை 10:40 மணியளவில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கர்நாடகாவிலிருந்த சென்னை சென்ட்ரலுக்கு வந்த விரைவு ரயிலில் பயணித்த பயணியின் உடமைகளை சோதனை செய்ததில் முறையான ஆவணங்களின்றி 52 லட்ச ரூபாய் இருந்தது கண்டறியப்பட்டது. பணத்தை பறிமுதல் செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்