"அ.தி.மு.கவுக்கு எல்லாமே நல்லபடியாக நடக்கும்"..."இரட்டை இலை சின்னத்திற்காக காத்திருக்கிறோம்" - செல்லூர் ராஜூ

x

எடப்பாடி பழனிசாமி தரப்பை தான் அதிமுக என மக்கள் நினைப்பதாக அக்கட்சி முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை கோச்சடை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இலவச மருத்துவ முகாமை தமது குடும்பத்தினருடன் தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, இரட்டை இலை சின்னம் கிடைப்பதற்காகதான் காத்து கொண்டு இருப்பதாகவும், சின்னம் கிடைக்காததால் வேட்பாளரை அறிவிக்கவில்லை என்று சொல்வது தவறு என்றும் கூறினார்.

அதிமுகவுக்கு எல்லாமே நல்லபடியாக நடக்கும் என்றும் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்