ஈரோடு இடைத்தேர்தல் - அதிமுக விருப்பமனு

ஈரோடு இடைத்தேர்தல் - அதிமுக விருப்பமனு
x

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்ப மனு படிவம் பெறலாம் என்று அதிமுக இடைக்கால துச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று முதல் விருப்பமனு படிவத்தை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

விருப்ப மனு படிவம் தாக்கல் செய்ய வரும் 26ஆம் தேதி கடைசி நாள் என்றும், தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

15 ஆயிரம் செலுத்தி விண்ணப்ப படிவம் பெறுபவர்கள், அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் தெளிவாக பூர்த்தி செய்து உடனடியாக வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த வார இறுதிக்குள் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்