மனைவி மகனை விட்டுவிட்டு உயிர் தப்ப ஓடிய ஓட்டுநர் - ஓட ஓட வெட்டி சாய்த்த கும்பல்

x

ஓசூர் அருகே, முன்விரோதம் காரணமாக டிராக்டர் ஓட்டுநர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தப்பியோடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.ஓசூர் அருகே உள்ள கும்ளாபுரம் பகுதியை சேர்ந்த டிராக்டர் ஓட்டுநர் ரமேஷ் என்பவருக்கும், அவரது பெரியப்பா மகன் கோட்டப்பா என்பவருக்கும் இடையே, நிலப்பிரச்னை தொடர்பாக நீண்ட காலமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், தனது கூட்டாளிகளுடன் வந்த ரமேஷ் வீட்டிற்கு வந்த கோட்டப்பா, வீட்டில் இருந்த ரமேஷ், அவரது மனைவி சாரதா மற்றும் மகன் ரவி ஆகியோரை தாக்கியது. இதில் உயிர் தப்புவதற்காக ஓடிய ரமேஷை, அந்த கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்தது. தகவல் அறிந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, கொலை செய்து விட்டு தப்பியோடிய கோட்டப்பா மற்றும் அவரது கூட்டாளிகளை, போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்