அறுந்து கிடந்த மின்கம்பி - தெரியாமல் சிக்கிய பால் வியாபாரி - சோக சம்பவம்

x

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே வசித்து வந்தவர் பாலசுப்பிரமணியன்.

பால் வியாபாரியான இவர், வியாபாரத்தை முடித்து விட்டு அத்திப்பாக்கம் சுடுகாடு அருகே வந்து கொண்டிருந்த போது, அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி உயிரிழந்தார்.

அவரது உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மின்வாரிய அதிகாரியிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்