நாமக்கல் பேருந்து நிலையத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் திடீர் சோதனை

x

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை போக்குவரத்து ஆய்வாளர் ஆய்வு செய்து பறிமுதல் செய்தார்.

அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கில், அதிக சப்தத்துடன் ஹாரன் வைத்து ஒலி எழுப்பி வருவதாக புகார் எழுந்தது. புகாரின் பேரில்,

ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் நித்யா மற்றும் நாமக்கல் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன் உள்ளிட்டோர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை, பயன்படுத்தினால் ஓட்டுனரின் உரிமை பறிக்கப்படும் என எச்சரித்தார். அது மட்டும் இன்றி, ஓட்டுனரை பேருந்துக்குக்கு கீழே அமர வைத்து ஹாரனைஅடித்தும் காட்டினார்


Next Story

மேலும் செய்திகள்