மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய ஓபிஎஸ்

x

சென்னையில் உள்ள இல்லத்தில், மாவட்ட செயலாளர்கள், இளைஞர் அணி மாவட்ட செயலாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 19 மாவட்ட செயலாளர்கள், இளைஞர் அணி மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், ஜே.சி.டி பிரபாகரன், பெரம்பலூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்