மகனை காப்பாற்ற முயன்றமாற்றுத்திறனாளி தந்தைக்கு நேர்ந்த துயரம்

x

திண்டுக்கல் கோட்டைகுளம் தொட்டியில் தவறி விழுந்த மகனை, காப்பாற்ற முயன்ற மாற்றுத்திறனாளி தந்தை, விஷவாயு தாக்கியதில் உயிரிழந்தார்.

மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள கோட்டைக் குளம் தொட்டி, விநாயகர் சிலைகள் கரைப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த தொட்டியில் குப்பைகள் சேர்ந்து, அவை அகற்றப்படடாத நிலையில் உள்ளன.

இந்த நிலையில், வெற்றிவேல் தனது மகனுடன் கோட்டை குளத்தில் குளிக்கச் சென்றபோது, சிறுவன் தவறி தொட்டிக்குள் விழுந்துள்ளார்.

மகனைக் காப்பாற்ற மாற்றுத்திறனாளியான அவரது தந்தை வெற்றிவேலும் தொட்டியில் இறங்கியுள்ளார். அப்போது விஷவாயு தாக்கியுள்ளது.

தகவலின் பேரில் வந்த தீயணைப்புத் துறையினரையும் விஷவாயு தாக்கியது. இதில், வெற்றிவேல் உயிரிழந்தார், விஷவாயு தாக்கிய 4 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்