செந்தில் பாலாஜியை திடீரென சந்தித்த டிஐஜி... வெளியான பரபரப்பு தகவல்

x

சென்னை, புழல் சிறையினுள் அமைச்சர் செந்தில் பாலாஜியை சிறைத்துறை டிஐஜி சந்தித்தது குறித்து சிறைத்துறையினர் விளக்கமளித்துள்ளனர்.

பண மோசடி வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்து சென்னை, புழல் சிறையில் அடைத்த நிலையில், செந்தில் பாலாஜியை சிறைத்துறை டிஐஜி சந்தித்ததாக தகவல் வெளியாகியது. இந்நிலையில், அமைச்சரை சிறைத்துறை டிஐஜி சந்தித்தது வழக்கமான ஒன்றுதான் எனவும், இதற்கு சிறையின் விதிமுறைகளில் வழி உள்ளது எனவும் சிறைத்துறையினர் விளக்கமளித்துள்ளனர். காலை, மாலை என இரு வேளைகளில் நடைபயிற்சி மேற்கொள்ளும் டிஐஜி, அப்போது கைதிகளை சந்திப்பது வாடிக்கையான ஒன்றுதான் எனவும் கூறியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்