சாமி கும்பிடுவது போல் நடித்து அம்மன் தாலியை திருடிய Couples..- பரபரப்பு சிசிடிவி காட்சி | Thanjavur

x

தஞ்சாவூர் மாவட்டம் பாப‌நாசம் அருகே, கோயில் கருவறை பூட்டை உடைத்து, அம்மன் தாலியை ஒரு தம்பதி திருடிச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கபிஸ்தலத்தில் உச்சிமாகாளியம்மன் கோயில் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு, அப்பகுதி மக்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, அம்மன் கழுத்தில் இருந்த இரண்டே கால் பவுன் தாலி செயின் காணாமல் போனது தெரிய வந்த‌து. சிசிடிவியை சோதனை செய்த போது, காரில் குழந்தையுடன் வந்த ஒரு தம்பதி, சாமி கும்பிடுவது போன்று சென்று தாலியை திருடிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்து. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கபிஸ்தலம் பகுதியில் கடந்த 3 நாட்களில் 3 இடங்களில் திருட்டு நடந்திருப்பதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்