ஆளும்கட்சி Vs எதிர்க்கட்சி இடையே வெடித்த மோதல்... 'லத்தி சார்ஜ்' நடத்தி விரட்டி அடித்த போலீஸ் - 144 தடை போடப்பட்டதால் பதற்றம்...

x

தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியை, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்காரர்கள் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக ஏற்பட்ட மோதலில், இரு கட்சியினரும் கற்கள் மற்றும் கட்டைகளால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இந்த கலவரத்தில் பலர் காயம் அடைந்த நிலையில், தலைவர்களின் வாகனங்கள் சேதம் அடைந்தன.

இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் லேசான தடியடி நடத்தி கலவரக்காரர்களை கலைத்தனர்.

மேலும், குறிப்பிட்ட பகுதிக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்தனர்.

இந்நிலையில், கட்சி அலுவலகம் மற்றும் தலைவர்களின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதற்கு, தெலுங்கு தேசம் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்