திடீரென விழுந்து நொறுங்கிய தேர்- ஆந்திராவில் அதிர்ச்சி

x

ஆந்திராவில் உள்ள புகழ்பெற்ற பென்னோபிலம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் தேர் சரிந்து விழுந்தது.

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம், பென்னோபிலம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் இன்னும் சில தினங்களில் பிரம்மோற்சவ விழா நடைபெறவுள்ளது. இதில் ​​லட்சுமி நரசிம்ம சுவாமி பலவேறு வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலிக்க உள்ளார். இந்நிலையில், உற்சவ மூர்த்திகள் தேரில் வலம் வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தேரை தூய்மைப்படுத்தி ஊர்வலத்திற்கு தயார்படுத்திக் கொண்டிருந்தபோது, தேர் திடீரென சரிந்து உடைந்து விழுந்தது. பல ஆண்டுகள் பழமையான தேர் என்பதால் விபத்து நேர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்