"வழக்கு பதியக்கூடாது" - போலீசை ஒருமையில் பேசிய போலி நீதிபதி..! கபிலனை கம்பி எண்ண வைத்த காவலர்கள்

x

கள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த நெப்போலியன் மீது அவரது மனைவி தொடர்ந்த வழக்கில், கபிலன், அவரது மனைவி, நெப்போலியன் மீது வரதட்சணை கொடுமை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதற்கான ஆவணங்களை ஆய்வாளர் ஜோதிலட்சுமி சரிபார்த்துக் கொண்டிருந்தபோது, காவல் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்த கபிலன், வரதட்சணை வழக்குப்பதிவு செய்யக்கூடாது என்று ஒருமையில் பேசி மிரட்டியுள்ளார். இதுதொடர்பாக புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அம்பத்தூர் சட்டம்-ஒழுங்கு போலீசார், நீதிபதி என்று கூறி மிரட்டிய கபிலனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்