11 கோயில்களை திறக்க தடை - சாமியாடி அழுது அருள் வாக்கு சொன்ன பெண்

x

நீலகிரி மாவட்டம் உதகை அருகே படுகர் இன மக்களின் குல தெய்வமான ஹெத்தை அம்மன் உள்ளிட்ட 11 கோயில்களை திறக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

சின்ன குன்னூர் பகுதியில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, 11 கோயில்களை திறக்க கூடாது என மாவட்ட நிர்வாகம் தடைவிதித்து உள்ளது. இதனால் பண்டிகை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை கோரிக்கை விடுத்தும் கோயில்களை திறக்க முடியாது என நிர்வாகம் கூறியுள்ளது. இதனையடுத்து பூட்டப்பட்டுள்ள ஹெத்தை அம்மன் கோயில் வாசலில், சுற்றுவட்டார மக்கள் ஒரு ரூபாய் காணிக்கை செலுத்தி வழிபட்டனர். அப்போது பெண் ஒருவர் சாமியாடி, அழுதபடி அருள் வாக்கு கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்