அதிகாலையிலேயே அவசர அவசரமாக லண்டன் கிளம்பினார் அண்ணாமலை

x

6 நாள் பயணமாக, சென்னையில் இருந்து துபாய் வழியாக லண்டனுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை, இன்று அதிகாலையில் புறப்பட்டுச் சென்றார்

தமிழ்நாடு பாஜக தலைவராக அவர் பொறுப்பேற்ற பிறகு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், தனது படிப்புக்காக அண்ணாமலை அமெரிக்கா சென்றிருந்தார். அமெரிக்காவில் அவர் 2 வாரம் தங்கியிருந்தார். அதைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் இலங்கைக்கு 3 நாள் பயணமாக அவர் சென்றிருந்தார். உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு இந்திய அரசின் நிதியுடன் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகளை ஒப்படைக்க அவர் இலங்கைக்கு சென்றிருந்தார். தற்போது, மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு கால சாதனையை விளக்கும் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அவர் லண்டன் செல்கிறார். இந்தப் பயணத்தின்போது லண்டனில் உள்ள தமிழ்ச் சங்க பிரதிநிதிகளையும் அண்ணாமலை சந்தித்துப் பேசவுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்