ஆந்திர இளைஞர்களுக்கு வேளாங்கண்ணியில் நடந்த கோர சம்பவம்

x

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி கடலில் மூழ்கி ஆந்திராவை சேர்ந்த 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.ஆந்திர மாநிலம் சித்தூர் குப்பம் பகுதியை சேர்ந்த சோமநாயக் சஞ்சய், கேசவர்தன், அஜீஸ், பைசுல்லா ஆகிய 4 பேரும் வேளாங்கண்ணி வந்தனர். அங்குள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த அவர்கள், கடற்கரைக்கு சென்று கடலில் குளித்தனர். அப்போது எழும்பிய ராட்சத அலையில் 4 பேரும் சிக்கி, ஆழத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டனர். பைசுல்லா, அஜீஸ் ஆகியோர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். கடலில் தத்தளித்த சஞ்சய், கேசவர்தனை, அங்கிருந்தவர்கள் காப்பாற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்