நீண்ட நாள் நடந்த சொத்து தகராறு - ஆத்திரத்தில் வழக்கறிஞர் மீது வெறிச்செயல்

x
  • நெல்லை மாவட்டத்தில் சொத்து தகராறு காரணமாக வழக்கறிஞர் ஒருவரின் கை வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • நெல்லை மாவட்டம் இடைச்சிவிளையை சேர்ந்தவர் பிரசாந்த் .
  • இவருக்கும் வழக்கறிஞரான சிவராமன் என்பவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
  • இந்நிலையில், திசையன்விளையில் வைத்து இரவில் ஏற்பட்ட தகராறில் வழக்கறிஞர் சிவராமனின் கையை பிரசாந்த் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வழக்கறிஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், பிரசாந்த் மற்றும் அவருடைய நண்பர் முருகன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்