மீனவ இளைஞர்களுக்கு தமிழக டிஜிபி சொன்ன அட்வைஸ்

x

மீனவ சமுதாய இளைஞர்கள் கடற்படையில் சேர ஆர்வம் காட்ட வேண்டும் என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கூறினார். கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 39 மீனவ இளைஞர்களுக்கு அரசுப் பணியில் சேர்வதற்கு கன்னியாகுமரியில் கடந்த இரண்டு மாதங்களாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த இளைஞர்களை தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு நேரில் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, மீனவ இளைஞர்கள் அரசின் உயர் பதவிகளுக்கு செல்வது குறைவாக உள்ளது என்றும், ராணுவம், கடற்படை மற்றும் காவல் துறையில் சேர்வதற்கு மீனவ இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்