சென்னை ஏர்போர்ட்டில் அதிர்ச்சி சம்பவம்..4-வது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்த பெண்

x

சென்னை விமான நிலைய கார் பார்க்கிங்கின், 4-வது மாடியில் இருந்து குதித்து, ஒரு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, பொழிச்சலூர் பகுதியில் ஐஸ்வர்யா என்பவர் தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவரது கணவர் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். ஐஸ்வர்யா கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாக தெரிகிறது. இந்நிலையில், இவர் தனது குழந்தைகளுடன், விமான நிலையத்தில் உள்ள திரையரங்கிற்கு படம் பார்க்க சென்றுள்ளார். குழந்தைகளை திரையரங்கில் விட்ட பின்னர், ஐஸ்வர்யா விமான நிலையத்தின் கார்பார்க்கிங் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்