ஓடும் வண்டியில் திடீரென கசிந்த கேஸ் சிலிண்டர் - ஊழியரின் செயலால் தவிர்க்கப்பட்ட அசம்பாவிதம்..

x

திண்டுக்கல் அருகில் வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை கொண்டு சென்ற போது எரிவாயு கசிவு ஏற்பட்டது. திண்டுக்கல் - கரூர் சாலையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மூலம் வீடுகளுக்கு விநியோகம் செய்வதற்காக 30க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் ஆட்டோவில் கொண்டுச் செல்லப்பட்டன. அப்போது ஆயுத படை மைதானம் அருகே, எரிவாயு கசிவு ஏற்பட்டது. இதனால், அதிர்ச்சி அடைந்த ஊழியர், வாகனத்தை சாலையோரம் நிறுத்தி விட்டு, கசிவு ஏற்பட்ட சிலிண்டரை தனியாக எடுத்து, சணல் சாக்கை சுற்றி மழை நீர் குட்டையில் வைத்தார். எரிவாயு முழுவதும் வெளியேறிய பிறகு, சிலிண்டரை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்