வீடு வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி பல லட்சம் அபேஸ் செய்த கும்பல் - கையும் களவுமாக தூக்கிய போலீஸ்

x

வீடு வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி பல லட்சம் அபேஸ் செய்த கும்பல் - கையும் களவுமாக தூக்கிய போலீஸ்

திண்டுக்கல்லைச் சேர்ந்த கனகராஜ், திருப்பூரில் உள்ள பாண்டியன் நகர், பெருமாநல்லூர், கணக்கம்பாளையம் ஆகிய பகுதிகளில் சிறி அளவிலான அலுவலகம் ஒன்றை திறந்துள்ளார். திருமுருகன் பூண்டி பகுதியில், ஏழை எளிய மக்களுக்கு அரசு சார்பில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில், வீடு வாங்கித் தருவதாக, ஆசை வார்த்தைகள் கூறி, கனகராஜ்,ஒவ்வொருவரிடமும் தலா 2 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். இவருக்கு உறுதுணையாக முகவராக பழனிசாமியும், முருகனும் கமிஷன் முறையில் பணியாற்றி வந்துள்ளனர். ஆனால் கூறியபடி, வீடு வாங்கிக் தராமல் ஏமாற்றியதால், பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து திருப்பூர் மாநகர குற்றப்பிரிவு போலீசாருக்கு 62 புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட கனகராஜ், பழனிசாமி, முருகன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்