திடீரென இடிந்து விழுந்த 3 மாடி கட்டடம்... தூங்கி கொண்டிருந்த 150 பேர் - 20 பேருக்கு நேர்ந்த கதி

x

ஹரியானா மாநிலம் கர்னாலில் மூன்று மாடி கட்டடத்தில் அரிசி ஆலை இயங்கி வந்தது.

இந்த கட்டடம் எதிர்பாராத விதமாக திடீரென இடிந்து விழுந்ததில், அதில் தூங்கிக் கொண்டிருந்த 150 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்ட நிலையில், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த நான்கு பேரின் உடல்களை மீட்டனர்.

இதனிடையே 20 பேர் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.

இந்த நிலையில் இடிந்து விழுந்த கட்டடம் விதிகளை மீறி கட்டப்பட்டது என தெரியவந்துள்ள சூழலில், ஆலை உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்