கோயில் சிலைகள் மூலம் நூதன பண மோசடி - போலி சாமியார் உட்பட 9 பேர் கைது | thanjavur | statue

x

தஞ்சை அருகே கோவில் சிலைகள் மூலம் நூதன மோசடியில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர். தஞ்சை மாவட்டம் புராதானவனேஸ்வரர் கோவில், அட்சயபுரீஸ்வரர் கோவில், தான்தோன்றி அம்மன் கோவில் ஆகிய 3 தலங்களிலும் சாமி சிலைகள் திருடு போவதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணையில் இறங்கிய போலீசார், சரவணன் என்ற போலி சாமியாரை கைது செய்தனர். விசாரணையில், கோவிலில் சிலைகளை திருடி மறைந்து வைத்து விடுவதும், போலி சாமியார் சரவணனிடம் குறிகேட்கும் மக்களிடம் சிலைகள் இருக்கும் இடத்தை கூறி பணம் பெறுவதும் தெரியவந்தது. இதனையடுத்து பல லட்ச ரூபாய் மோசடி செய்துள்ள 9 பேர் கொண்ட கும்பலை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 6 சாமி சிலைகளை மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்