தீவன நீர் குடித்த 5 பசுமாடுகள்...அடுத்தடுத்து சுருண்டு விழுந்து உயிரிழப்பு | Cow

x

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே தீவன நீரை குடித்த 5 பசு மாடுகள், அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வடமதுரை அருகே, பெரியசாமி என்ற விவசாயி கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். இவர் தனது வீட்டில் 5 பசு மாடுகளை வளர்த்து வந்தார். இந்நிலையில், அவரது மனைவி வடிவுக்கரசி மாடுகளுக்கு கால்நடை தீவனம் கலந்த நீரை தொட்டியில் குடிக்க வைத்துள்ளார். அதை குடித்த சிறிது நேரத்தில் 5 மாடுகளும் அடுத்தடுத்து சுருண்டு விழுந்து, அசைவற்று கிடந்தன. அதிர்ச்சியடைந்த வடிவக்கரசி கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். சிகிச்சையளித்தும் 5 மாடுகளும் அடுத்தடுத்து உயிரிழந்தன. கால்நடை மருத்துவர் நடத்திய ஆரம்ப கட்ட சோதனையில், தீவன நீரில் யூரியா கலந்திருந்தது தெரியவந்தது. இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்