திடீரென மாயமான 3 சிறுமிகள்... விடிய விடிய தேடி அலைந்த போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி

கடலூர் அருகே மாயமான மூன்று சிறுமிகளை விடிய விடிய தேடி அலைந்த போலீசார், அவர்களை மீட்டுள்ளனர்.
x

முதுநகர் பகுதியில் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகள் மாயமானதாக பெற்றோர்கள் புகார் அளித்தனர். உடனடியாக வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுமிகளை விடிய விடிய தேடி அலைந்தனர். கொத்தவாச்சேரி நிறுத்தத்தில் 3 சிறுமிகள் இருப்பதாக காவல்துறைக்கு பேருந்து நடத்துநர் தகவல் அளித்தனர். அதன்படி, அங்கு விரைந்த போலீசார், மூன்று சிறுமிகளை மீட்டனர். பேருந்தில் பயணிக்க ஆசையாக இருந்ததால், இலவச பேருந்தில் ஏறி கொத்தவாச்சேரி வந்ததாக சிறுமிகள் போலீஸாரிடம் கூறியுள்ளனர். இதையடுத்து, மூன்று சிறுமிகளையும் போலீசார் கடலூர் அழைத்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்