அடிதடியில் முடிந்த திண்ணை பிரச்சாரம்... கட்டி உருண்ட கவுன்சிலர்..! இருதரப்பாக மோதிய பரபரப்பு காட்சி

Update: 2024-02-29 13:04 GMT

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது. கடையநல்லூர் நகரச் செயலாளர் அப்பாஸை பார்த்து அவரது எதிர்ப்பு அணியினர், வார்டு செயலாளருக்கு தகவல் தராமல், எப்படி இங்கு கூட்டம் நடத்தலாம் என கேள்வி எழுப்பியதால், வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வஹாப் என்பவரை, கவுன்சிலர் கனி கீழே தள்ளி இருவரும் மாறி மாறி அடித்துக் கொண்டதால் இருவரும் காயமடைந்தனர். இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சம்பவம் தொடர்பாக இருதரப்பிலும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்