"இதற்கு வராத பிரதமர் இப்போ வந்த‌து ஏன்?" - அடுக்கடுக்காக எழும்பிய கேள்விகள்

Update: 2024-01-21 03:58 GMT

தமிழகத்தில் வெள்ள பாதிப்பை பார்வையிட வராத பிரதமர் மோடி தற்போது வந்தது ஏன்? என்று தமிழக காங்கிரஸ் மேலிட பார்வையாளர் அஜோய் குமார் கேள்வி எழுப்பியுள்ளார். தலைமை அலுவலகமாக சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக கூட்டணி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 இடங்களில் வெற்றி பெறும் என்றார். 2 நாட்களில் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவாத்தையில் இடம்பெறும் குழு அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பிரதமர் மோடி மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி இருக்கும் வரை தமிழகத்தில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்