சோதனைக்கு சென்ற அதிகாரிகளை ஓட ஓட விரட்டி அடிக்க முயன்ற வட மாநிலத்தவர்கள்..?

Update: 2024-01-19 11:49 GMT

மேள தாளம், பூங்கொத்துகள், செல்போன் கவர்கள், சாமி சிலைகளை தயாரித்து வியாபாரம் செய்வதற்காக வட மாநில தொழிலாளர்கள் பழனி அருகில் உள்ள சிவகிரிப்பட்டி ஊராட்சி அலுவலகம் பகுதியில் காலியிடங்களில் தற்காலிக குடிசைகளை அமைத்து வசித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை உள்ளூர் வியாபாரிகளுக்கு வடமாநில தொழிலாளர்கள் மொத்தமாக விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சரவணன் என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் அவர் சோதனைக்கு சென்றுள்ளார்... அப்போது சரவணனனை வட மாநில தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து தாக்க முயற்சித்ததாகவும், அவர் தப்பி ஓடி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்