நள்ளிரவில் வீட்டில் கைவரிசை - சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு

Update: 2024-03-21 04:10 GMT

கன்னியாகுமரியில் நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து மர்மகும்பல் நகை, பணம் கொள்ளையடிக்கும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்த சிந்து என்பவர் வெளியே சென்றிருந்த நிலையில், அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், பீரோவில் இருந்த 5 சவரன் தங்க நகை, 10 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர். இது தொடர்பான புகாரின் பேரில் சிசிடிவி காட்சி உதவியுடன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்