Dindigul | சமத்துவ மீன்பிடி திருவிழா கோலாகலம்.. வகை வகையாய் சிக்கிய மீன்கள் - மக்கள் மகிழ்ச்சி
Dindigul | சமத்துவ மீன்பிடி திருவிழா கோலாகலம்.. வகை வகையாய் சிக்கிய மீன்கள் - மக்கள் மகிழ்ச்சி
திண்டுக்கல் அருகே கருத்தலக்கம்பட்டியில் சமத்துவ மீன்பிடித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
இதில், புதூர், நல்லூர், கரையூர், அரவக்குறிச்சி உள்ளிட்ட சுற்று வட்டாரங்களில் உள்ள கிராம மக்கள் கலந்து கொண்டு கச்சா, வலை, கூடை ஆகியவற்றை கொண்டு மீன் பிடித்தனர்.
ஜிலேபி, குரவை, ரோகு, பாப்லெட், உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் பிடிபட்டதால் மக்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.